விசார சங்கிரகம் - சுய விசாரணை
விசார சங்கிரகம் - சுய விசாரணை (16)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (14)

விசார சங்கிரகம் – சுய விசாரணை (15)

(15)

பக்தர்:  

மனம், புலன் உறுப்புகள் முதலியவைக்கு பார்க்கும் திறன் இருக்கும் போதும், ஏன் அவை பார்க்கப்படும் பொருட்களாகக் கருதப் படுகின்றன?

மகரிஷி:

 

  

த்ருக் (பார்ப்பவர், அறிபவர்)

த்ருஸ்யா (பார்க்கப்படும், அறியப்படும் பொருள்)

1

பார்ப்பவர், அறிபவர்

பார்க்கப்படும், அறியப்படும் பொருள் (உதாரணமாக ஒரு பானை)

                                                 மேலும்  
2 கண் உறுப்பு உடல், பானை முதலியவை
3 கண் புலன் கண் உறுப்பு
4 மனம் கண் புலன்
5 தனிப்பட்ட ஜீவன் மனம்
  பிரக்ஞை உணர்வு (சுய சொரூப ஆன்மா) தனிப்பட்ட ஜீவன்
     
     

 

மேற்கண்ட திட்டத்தில் காட்டியது போல், பிரக்ஞை உணர்வான நாம், எல்லா பொருட்களையும் அறிவதால், நாம் அறிபவர் (திருக்) என்று சொல்லப்படுகிறோம்.

பானை என்பதில் முடியும் வகைகள், பகுப்புகள்,  நம்மால் அறியப்படுவதால், அவை அறியப்படுபவை (த்ருஸ்யா).

மேலே அளிக்கப்பட்ட ‘அறிவு : அறியாமை’ (அதாவது அறிபவர்-அறியப்படுவது) என்ற அட்டவணையில் உள்ள அறிபவர்கள், அறியப்படும் பொருட்கள், இவற்றில் ஒவ்வொன்றும் மற்றொன்றை ‘அறிபவர்’ ஆகிறது என்பதைக் காணலாம். இருந்தாலும், ஒன்று மற்றொன்றின் ‘அறியப்படும் பொருளாக’ இருப்பதால், இந்த வகைகளில் எதுவுமே உண்மையில் ‘அறிபவர்’ இல்லை.

நாம் எல்லாவற்றையும் அறிவதால் நாம் ‘அறிபவர்’ என்று சொல்லப்பட்டாலும், நாம் எதாலும் அறியப்படாமல் இருப்பதால் ‘அறியப்படும் பொருள்’ என்று சொல்லப்படாமல் இருந்தாலும், அறியப்படும் பொருட்களின் சம்பந்தத்தில் மட்டுமே நாம் ‘அறிபவர்’ என்று சொல்லப்படுகிறோம்.

ஆனால், உண்மையில், ‘அறியப்படும் பொருள்’ நம்மை விட்டு அகன்று இல்லை. எனவே, நாம் அறிபவர்-அறியப்படுவது, இவை இரண்டையும் கடந்து  உள்ள உண்மைத் தன்மை. மற்றவை எல்லாம் அறிபவர்-அறியப்படுவது என்ற வகைகளில் அமைகின்றன. 

~~~~~~~~

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Translated from English into Tamil : Vasundhara

~~~~~~~~

குறிப்பு : 

“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.

அவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார்.  திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.  பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

விசார சங்கிரகம் - சுய விசாரணை (16)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (14)
விசார சங்கிரகம் – சுய விசாரணை (15)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!