Skip to main content

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7

What is Meditation? How to do it? (7)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 310. திரு. க்ரீன்லீஸ்: பக்தர்: தொழில் பணிகள், தியானம் செய்வதற்காக தனியாக நேரம் எடுத்துக் கொள்ள விடுவதில்லை. இடைவிடாமல் “நான்” என்று நினைவுறுத்திக் கொண்டே, வேலை செய்யும்போது கூட அதை உணர முயன்றுக் கொண்டே இருந்தால், அது போதுமா?  மகரிஷி: மனம் வலிமையான பின் அது நிலையாக ஆகி விடும். மீண்டும் மீண்டும் செய்யும் பயிற்சி மனதை வலிமையாக்குகிறது. இத்தகைய மனம் […]

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6

What is Meditation? How to do it? (6)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 319. பக்தர்: குறைபாடு, அறியாமை, இச்சை, இவற்றின் மாசு, தியானத்தின் வழியில் தடங்கல்கள் ஏற்படுத்துகின்றன. அவற்றை எப்படி வெற்றி கொள்வது?  மகரிஷி: அவற்றால் தடுமாறாமல் இருப்பதால். பக்தர்: அருள் தேவை.  மகரிஷி: ஆமாம். அருள் தான் தொடக்கமும் ஆகும், முடிவும் ஆகும். உள்முக திருப்பம் அருளால் தான். விடாமுயற்சி அருள் தான். ஆன்ம ஞானம் அருள் தான்.  “மாமேகம் ஷரணம் வ்ரஜா”, அதாவது “என்னிடம் […]

தியானத்தில் வலிகளையும் இன்னல்களையும் வெல

தியானத்தில் வலிகளையும் இன்னல்களையும் வெல்வது எப்படி

தியானத்தில் வலிகளையும் இன்னல்களையும் வெல்வது எப்படி உரையாடல் 462. ஒரு பெண்மணி மகரிஷியிடம் கேள்விகள் கேட்டு உதவி பெற மிகவும் ஆவலாக இருந்து வந்தாள். அவள் மிகவும் தயக்கத்துடன் அவரை அணுகி தனது இன்னல்களை மெதுவாக விவரித்தாள். அவளது சொற்கள் பின்வருமாறு.   திடீர்ரென்று எழும் நெஞ்சுத் துடிப்புகளாலும், வேகமான மூச்சுகளாலும், ஒருமுக கவனம் செலுத்துவதற்கு நான் செய்யும் முயற்சிகள் தடுக்கப்பட்டு அல்லல் தருகின்றன. பிறகு என் எண்ணங்களும் விரைந்தோடி செல்கின்றன; அவை கட்டுப்படுத்த முடியாமல் போய் […]

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5

What is Meditation? How to do it? (5)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~ உரையாடல் 80. பக்தர்: தியானம் அவசியமா? மகரிஷி: பூமி கூட எப்போதும் தியானத்தில் ஆழ்ந்துள்ளது என்று உபநிடதங்கள் உறைக்கின்றன.   பக்தர்: நற்செயல்களும் பணிகளும் செய்வது எப்படி உதவுகிறது? அகற்றவேண்டிய ஏற்கனவே உள்ள கனமான சுமையுடன் இன்னும் சுமையைச் சேர்த்துக் கொள்ளாதா? மகரிஷி:சுயநலமற்ற செயல்கள் செய்வது மனதைத் தூய்மையாக்குகிறது. தியானத்தில் ஆழ்த்த உதவுகிறது. பக்தர்: செயல்களே செய்யாமல் ஒருவர் இடைவிடாத தியானம் […]

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4

What is Meditation? How to do it? (4)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) ~~~~~~~~ உரையாடல் 326. மிகுந்த காலமாக வசித்து வரும் ஒரு உதவியாளரின் கேள்விக்கு மகரிஷி இவ்வாறு பதிலளித்தார். “எல்லோரும் மனதின் அமைதியற்ற அலைச்சலைப் பற்றி குறை சொல்கின்றனர். மனம் கண்டுபிடிக்கப் படட்டும். பிறகு அவர்கள் தெரிந்துக் கொள்வார்கள். ஒரு மனிதர் தியானம் செய்ய உட்கார்ந்தவுடன், அதிகமான அளவில் எண்ணங்கள் விரைந்து பாய்ந்து வருகின்றன என்பது உண்மை தான். மனம் என்பது எண்ணங்களால் அமைந்த ஒரு மூட்டை தான். எண்ணங்களாலான […]

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3

What is Meditation? How to do it? (3) Video

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3)  ~~~~~~~~ உரையாடல் 371. பக்தர்.: தியானம் என்றால் என்ன?  மகரிஷி.: ஒரே ஒரு எண்ணத்தை மட்டும் பிடித்துக் கொண்டு, மற்ற எல்லா எண்ணங்களையும் புறக்கணிப்பது தான் தியானம்.  பக்தர்.: எதன் மேல் தியானம் செய்ய வேண்டும்?  மகரிஷி.: உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதன் மேல்.  பக்தர்.: சிவன், விஷ்ணு, காயத்ரி – இவை எல்லாம் ஒரே விதமாக செயல் விளைவுகள் உடையவை என்று சொல்லப்படுகிறது. எதன் மேல் நான் […]

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2

What is Meditation? How to do it? (2)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) (கட்டுரை)   “நான் யார்?” (தியானத்தைப் பற்றிய சில அறிவுரைகள்) ~~~~~~~~ மனம் அமைதி அடையும்போது மூச்சு அடங்குகிறது. மூச்சு அடங்கும்போது, மனம் அமைதி அடைகிறது. பிராணாயாமம் (சுவாசக் கட்டுப்பாடு) என்பது மனதை அமைதியுறச் செய்ய ஒரு பயிற்சி தான்.   சுவாசக் கட்டுப்பாட்டைப் போல், கடவுளின் உருவங்களின் மீது தியானம் செய்வதும், மந்திரங்களை உரைப்பதும், உணவைக் கட்டுப்படுத்துவதும், மனதை அமைதியுறச் செய்வதற்கான சகாயங்கள் தான். கடவுளின் உருவங்களின் மீது […]

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1

What is Meditation? How to do it? (1)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல்  68. ஒரு பெண்மணியுடன் உரையாடல் பக்தர்: தியானத்திற்கும் கவனச்சிதறலுக்கும் வித்தியாசம் என்ன?  மகரிஷி.: வித்தியாசம் ஒன்றும் இல்லை. எண்ணங்கள் இருக்கும் போது அது கவனச் சிதறல். எண்ணங்கள் இல்லாத போது, அது தியானம். ஆனால், தியானம் ஒரு பயிற்சி தான். உண்மையான அமைதி நிலை இல்லை. பக்தர்: தியானம் செய்வது எப்படி?  மகரிஷி.: எண்ணங்களிடமிருந்து அகன்று இருங்கள்.  ~~~~~~~~ […]

 
error: Content is protected !!