Skip to main content

உள்ளது நாற்பது – அனுபந்தம்

Forty Verses on Reality Supplement

உள்ளது நாற்பது – அனுபந்தம் திரு ரமண மகரிஷி மங்கலம் (விருத்தம்) எதன்கண்ணே நிலையாகி யிருந்திடுமிவ் வுலகமெலா மெதன தெல்லா மெதனின்றிவ் வனைத்துலகு மெழுமோமற் றிவையாவு மெதன்பொ ருட்டா மெதனாலிவ் வையமெலா மெழுந்திடுமிவ் வெல்லாமு மெதுவே யாகு மதுதானே யுளபொருளாஞ் சத்தியமா மச்சொருப மகத்தில் வைப்பாம். பொருள்: உலகம் எதனைப் பற்றிக் கொண்டு நிலையாக நிற்கிறதோ/இருக்கின்றதோ, யாவும் எதனுடைய உடமையாகுமோ, எதிலிருந்து அனைத்துலகும் தோன்றுகின்றதோ, இவையாவும் என்ன காரணத்திற்காகவோ, எதனாலே உலகமெல்லாம் தோற்றி வைக்கப்படுகின்றதோ, எல்லாமும் எதுவாக […]

உள்ளது நாற்பது

Forty Verses On Reality

உள்ளது நாற்பது – கலிவெண்பா  திரு ரமண மகரிஷி (கலிவெண்பா) மங்கலம் உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு ளுள்ளலற வுள்ளத்தே யுள்ளதா – லுள்ளமெனு முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே யுள்ளபடி யுள்ளதே யுள்ள லுணர்வாயே – யுள்ளே* பொருள்: உள்ளதாகிய மெய்ப்பொருள் இருந்தாலன்றி இருக்கிறோம் என்னும் இருப்புணர்வு தோன்றுமா? அது எண்ணங்களற்ற இதயத்தில் இருப்பதால், இதயம் என்று கூறப்படும் அந்த உண்மைப் பொருளைத் தியானிப்பது எப்படி? அது உள்ளத்தில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நாம் இதயத்தில் இருப்பதே […]

உபதேச உந்தியார்

Upadesa Undhiyar

உபதேச உந்தியார்   (கலித்தாழிசை) உபோற்காதம் திரு முருகனார் அருளிய பாக்கள் 6 1. தாரு வனத்திற் றவஞ்செய் திருந்தவர் பூருவ கன்மத்தா லுந்தீபற போக்கறை போயின ருந்தீபற. பொருள்: தாருகா வனத்தில் தவம் செய்து வந்த முனிவர்கள் பூர்வ கர்ம வினை காரணமாகத் தவறான வழியிலே (கர்ம காண்டிகளாகப்) போனார்கள். 2. கன்மத்தை யன்றிக் கடவு ளிலையெனும் வன்மத்த ராயின ருந்தீபற வஞ்சச் செருக்கினா லுந்தீபற. பொருள்: கர்மமே அல்லாமல், பலனைத் தரும் கடவுள் இல்லை […]

 
↓
error: Content is protected !!