
திரு ரமண மகரிஷி – தமிழ்
திரு ரமண மகரிஷி … அன்பே உருவானவர், கருணையின் வடிவம், மன்னிக்கும் இறைபொருள், புரிந்துக்கொள்ளும் சக்தி ரூபம், மெய்யான ஆழ்நிலை…
இந்த வலைத்தளம் திரு ரமண மகரிஷியின் அறிவுரைகளும் வழித்துணையும் வழங்குகிறது. ரமணரின் சொற்கள் எல்லோருக்கும் அன்பும், ஆதரவும், ஆறுதலும் அளிக்கின்றன. அவை நமது வாழ்க்கைக்கும், ஆழ்நிலை ஆய்வுக்கும், ஆன்ம அபிவிருத்திக்கும் மிக்க உதவி அளிக்கின்றன. ரமணரது வசத்தில் வருபோர்க்கு அவர்கள் அறியாமலே மன அமைதியும், சாந்தியும் உண்டாகிறது.
ரமணர் எனது சிறந்த நண்பராவார். உண்மை என்னவெனில், அவரவர்களுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், ரமணரை மனதால் அணுகுபவர் எல்லோருக்குமே அவர் சிறந்த நண்பர் தான்.