மிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு பகவான் ரமண மகரிஷி, எல்லோரிலும் உள்ள ஆன்மாவாக உறைவதால், அவர் எல்லா மிருகங்களுடனும் தோழமையாக இருந்ததும், மிருகங்கள் அவரது முன்னிலையில் மிகவும் அமைதியாக இருந்ததும் அதிசயம் ஒன்றுமில்லை. அவருக்கும் பசு லக்ஷ்மிக்கும் இருந்த உன்னத நட்பு எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அற்புதமான விஷயம் என்னவென்றால், நாகப்பாம்பைப் போலவும் மற்ற மிகவும் கொடியதாகவும் உள்ள மிருகங்களைக் கூட அவர் சாந்தமாக்கி அடங்க வைத்தார். அவரது ஆத்மார்த்தமான பக்தர்கள் பலர், அவர் மிருகங்களைக் […]
You are browsing archives for
Category: ரமண மகரிஷியின் வாழ்க்கை
ரமண மகரிஷியும் பசு லக்ஷ்மியும்
ரமண மகரிஷியும் பசு லக்ஷ்மியும் ரமண மகரிஷிக்கு மிருகங்களுடன் அதிசயமான நட்பு இருந்தது. அவர் மிருகங்களை மிகவும் கருணையுடனும் அன்புடனும் நடத்தினார். ஆனால், தெய்வீகமான பசு லக்ஷ்மியைப் பற்றி ஜனங்கள் கேள்விப்படும்போது, ரமண மகரிஷியால் ஒரு வெறும் பசுவுக்கு இவ்வளவு மரியாதையும் முக்கியத்துவமும் ஏன் கொடுக்கப் படுகிறது என்று வியக்கலாம். பாரத நாட்டில் பொதுவாக ஒரு பசு, அது பசும்பால் எனும் உணவு தருவதாலும், மற்ற அதன் உபயோகங்களாலும், மேலும் அதன் அன்பான, பிரியமான பண்புகளாலும், புனிதமாகக் கருதப்படுகிறது என்பது […]
ரமணாஸ்ரமம் ஏற்பட்டது
ரமணாஸ்ரமம் ஏற்பட்டது ரமணர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சமயத்தில் ஒரு ஆஸ்ரமம் உடனே தானாக ஏற்படவில்லை. முதலில் மூங்கில் கம்பங்களாலும், பனையோலைகளால் அமைக்கப்பட்ட கூரையாலும் எழுப்பப்பட்ட ஒரு கொட்டகை தான் இருந்தது. அடுத்து வந்த வருடங்களில் ஜனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது, நன்கொடைகள் வந்தன, பிறகு சரியான ஆஸ்ரம கட்டிடங்கள் எழுப்பப் பட்டன. ரமணர் அமர்ந்து வந்த கூடம், அலுவலகம், புத்தகக் கடை, மருந்தகம், ஆண் விருந்தினர்களுக்கு ஓர் அறை, மற்றும் நீண்ட காலம் தங்கும் விருந்தாளிகளுக்கு ஓரிறு […]
அருணாசலத்தில் ரமணரின் வாசம்
அருணாசலத்தில் ரமணரின் வாசம் திரு ரமண மகரிஷி திருவண்ணாமலையில் முதலில் பல இடங்களில் வாசம் செய்தார். பிறகு அருணாசல மலையின் பல குகைகளில் தங்கினார். கடைசியாக தற்போது திரு ரமணாஸ்ரமம் என்று வழங்கும் திருத்தலத்தில் மகாமுக்தி அடையும் வரை வசித்தார். அவர் விதிமுறைப்படி சந்நியாசம் எடுத்துக் கொள்ளவே இல்லை. மேலும் அவர் யாரையும் தமது சீடராகவோ, மாணவர்களாகவோ சொல்லிக் கொள்ளவும் இல்லை. திருவண்ணாமலையை அடைந்த நாளிலிருந்து மகாமுக்தி அடையும் வரை, திரு ரமணர் தமது அன்பார்ந்த […]
அருணாசலத்திற்கு பயணம்
அருணாசலத்திற்கு பயணம் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி, இலக்கணத்தின் பாடம் ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வெங்கடராமனுக்கு இவை எல்லாவற்றிலும் உள்ள பயனற்ற தன்மை திடீரென்று உறைத்தது. பாட காகிதங்களை தள்ளி வைத்து விட்டு, ஆழ்ந்த சிந்தனையில், தியானத்தில் அமர்ந்தார். அவரை கவனித்துக் கொண்டிருந்த அவரது சகோதரர் நாகஸ்வாமி, சிறிது கடுமையாக ரமணரிடம், “இத்தகைய பெரிய மனிதருக்கு இதெல்லாம் என்ன பயன்?” என்று சொல்லி கேலி செய்தார். ரமணர் சகோதரரின் குற்றச்சாட்டின் உண்மையை புரிந்துக் கொண்டார். ரகசியமாக […]
ரமணரின் மரணத்தைக் கடந்த நிலையின் அனுபவம்
ரமணரின் மரணத்தைக் கடந்த நிலையின் அனுபவம் வெங்கடராமனின் வாழ்வின் திருப்பம் எதிர்பாராத விதத்தில் தன்னியல்பாகவே வந்தது. ஒரு நாள் பகலில், ஒரு காரணமும் இன்றி, இளைஞருக்கு திடீரென்று மரணத்தின் கொடுமையான பயம் தோன்றியது. பல வருடங்களுக்குப் பிறகு, திரு ரமணர் தமது அனுபவத்தை பின் வருமாறு உறைத்தார். “மதுரையை விட்டு அறவே அகன்று செல்வதற்கு சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னால், என் வாழ்வில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. அது திடீரென்று தோன்றியது. நான் வீட்டின் ஒரு […]
திரு ரமண மகரிஷியின் இளமை காலம்
திரு ரமண மகரிஷியின் இளமை காலம் ஆருத்ரா தரிசனம் என்பது சிவ பெருமான், வானளாவிய அகண்ட ஞாலத்தில் நடனமாடும் திரு நடராஜர் என்ற ரூபத்தில் தோன்றிய திருவிழா. இந்த திருவிழா தமிழ் நாட்டின் திருச்சுழியில், பூமிநாதர் கோவிலில், டிஸம்பர் மாதம், 29ம் தேதி, 1879 வது வருஷத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. சிவபெருமானின் அலங்கரிக்கப் பட்ட திருவுருவம் சடங்கு முறைகளின் படி, பகலிலும் இரவிலும், தெருக்களில் ஊர்வலம் சென்று வந்தது. தெய்வம் மீண்டும் கோவிலுக்குள் […]
பகவான் திரு ரமண மகரிஷி
பகவான் திரு ரமண மகரிஷி திரு ரமண மகரிஷி. ரமண மகரிஷியைப் பற்றி தெரியாதவர்களுக்கு நான் பணிவுடன் ஒரு அறிமுகம் அளிக்க விரும்புகிறேன். தெரிந்தவர்களுக்கும் அவரைப் பற்றி எத்தனை முறைக் கேட்டாலும் அலுக்காது. ரமண மகரிஷி இந்தியாவில், பாரத நாட்டின் ஒரு மாபெரும் ஞானியாவார். திரு ரமணர் அன்பு, கருணை, புரிந்துக் கொள்ளல், மன அமைதி, பரிபூரணம் – இந்த எல்லா சிறந்த குணங்களையும் கொண்ட மகரிஷி. அவர் தெய்வத்தின் உருவகமாவார். உயர்ந்த பெற்றோர்களுக்கு அற்புத ஒளியுடன் […]