விசார சங்கிரகம் - சுய விசாரணை
விசார சங்கிரகம் - சுய விசாரணை (14)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (12)

விசார சங்கிரகம் – சுய விசாரணை (13)

(13)

பக்தர்:  

பணிகளுக்காக செயல்பாடு இருக்கும் போது, நாம் அதைச் செய்பவரும் இல்லை, அனுபவிப்பவரும் இல்லை. செயல்பாடானது, மனம், வாக்கு, உடல் என்ற இந்த மூன்று கருவிகளால் செய்யப்படுகிறது. இது போல யோசித்தவாறு நாம் பற்றுதல் இல்லாமல் இருக்க முடியுமா?

மகரிஷி:

ஆன்மாவை தெய்வமாகக் கொண்ட மனம், ஆன்மாவில் தங்கி இருக்கச் செய்து வைக்கப்பட்ட பின், அது ஆன்மாவை விட்டு அகன்று அலையாமல் இருப்பதால் லௌகீக விஷயங்களில் அக்கறையற்று இருக்கச் செய்து வைக்கப்பட்ட பின், மேலே குறிப்பிட்டது போல் மனம் எப்படி யோசிக்க முடியும்? இத்தகைய எண்ணங்களே பிணைப்பாக அமைவதில்லையா?

மிஞ்சி இருக்கும் பூர்வ மனப்போக்குகளின் காரணமாக இத்தகைய எண்ணங்கள் எழும் போது, ஒருவர் தனது மனதை அந்த விதமாக ஓடாமல் கட்டுப்படுத்த வேண்டும்; அதை சுய சொரூப நிலையில் தங்க வைக்க முயற்சி செய்ய வேண்டும்; அதை லௌகீக விஷயங்களைப் பற்றி அக்கறையில்லாமல் இருக்கும்படி திருப்ப வேண்டும்.

ஒருவர் மனதில், “இது நல்லதா? அல்லது அது நல்லதா? இது செய்ய முடியுமா? அல்லது அது செய்ய முடியுமா?” என்பது போன்ற எண்ணங்களுக்கு இடமே கொடுக்கக் கூடாது. இத்தகைய எண்ணங்கள் எழுவதற்கு முன்பே ஒருவர் கவனமாக இருந்துக் கொண்டு, மனதை அதன் சுய நிலையில் தங்க வைக்க வேண்டும். சிறிதளவு இடம் கொடுத்தால் கூட, இத்தகைய அமைதி குலைந்த மனம் ஒரு நண்பனைப் போல் வேஷம் போட்டுக் கொண்டு நமக்கு கெடுதல் செய்யும். ஒரு எதிரி நண்பனைப் போல காட்சியளிப்பது போல், அது நம்மை தலைகீழாகக் கவிழ்த்து விடும். 

ஒருவர் தனது சுய தன்மையை மறப்பதால் அல்லவா இத்தகைய எண்ணங்கள் எழுந்து மேலும் மேலும் தீவினை விளைவிக்கின்றன? “நான் எதுவும் செய்வதில்லை, எல்லா செயல்களும் கருவிகளால் தான் செய்யப் படுகின்றன” என்று விவேகத்துடன் நினைத்துக் கொள்வது, மனதை எண்ண மனப்போக்குகளின் வழியாக ஓட விடாமல் தடுப்பதற்கு ஒரு வழிமுறை என்பது உண்மை தான். ஆனால், மனம் இப்படி எண்ண மனப்போக்குகளின் வழியாக ஓடினால் தான், முன்பு சொன்னபடி அது விவேகத்துடன் கட்டுப்படுத்தப் பட வேண்டும் இல்லையா?  தனது சுய நிலையில் தங்கி உறையும் மனம், “நான்” என்றும் “நான் இப்படி உலக விஷயங்களில் செயல்படுகிறேன்” என்றும் நினைக்க முடியுமா?

முடிந்த எல்லா விதங்களிலும், ஒருவர் சிறிது சிறிதாக, கடவுளான தனது மெய்யான சுய தன்மையை மறக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். இது சாதிக்கப்பட்டால், எல்லாம் சாதிக்கப்படும். மனதை வேறு எந்த விஷயத்திலும் திருப்பக் கூடாது. முன் வினை பிராரப்தத்தின் விளைவால், ஒருவர் பித்து பிடித்தவர் போல் செயல்களைச் செய்தாலும், அவர் “நான் செய்கிறேன்” என்ற எண்ணமே எழாமல்,  தனது மனதை சுய தன்மையில் தங்கி இருக்கச் செய்ய வேண்டும்.  எண்ணிலங்கடாத பல பக்தர்கள், அக்கறையில்லாத மனப்போக்குடன் தமது எண்ணற்ற மிகப் பல லௌகீக செயல்களை செய்யவில்லையா?

~~~~~~~~

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Translated from English into Tamil : Vasundhara

~~~~~~~~

குறிப்பு : 

“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.

அவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார்.  திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.  பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

விசார சங்கிரகம் - சுய விசாரணை (14)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (12)
விசார சங்கிரகம் – சுய விசாரணை (13)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!