விசார சங்கிரகம் - சுய விசாரணை
விசார சங்கிரகம் - சுய விசாரணை (13)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (11)

விசார சங்கிரகம் – சுய விசாரணை (12)

(12)

பக்தர்:  

பழ வினைகளின் பிராரப்தத்தின் பிரகாரம் பணிகளைச் செய்ய வேண்டிய மனதினால்,  உலகம் சார்ந்த வாழ்வில் கூட, மேற்சொன்ன ஆன்ம சுய சொரூப அனுபவம் பெற முடியுமா?

மகரிஷி:

ஒரு பிராம்மணர் (பிரம்மனை அறிந்தவர்) நாடகத்தில் பல வேஷங்களில் நடிக்கலாம்; ஆனாலும் தாம் ஒரு பிராம்மணர் என்ற எண்ணம் அவரது மனதை விட்டு நீங்குவதில்லை. அதே போல், ஒருவர் உலகம் சார்ந்த பல நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், “நான் உடல் தான்” என்பது போன்ற பொய்யான கருத்து எழ விடாமல், “நான் ஆன்மா தான்” என்ற திடமான நம்பிக்கை கொள்ள வேண்டும். 

தனது உண்மைத் தன்மையிலிருந்து மனம் விலகிச் சென்றால், உடனேயே ஒருவர், “ஓ! நாம் உடல் இல்லை! நாம் யார்?” என்று சுய விசாரணை செய்ய வேண்டும். இவ்வாறு செய்து, ஒருவர் மனதை அந்த தூய நிலையில் மீண்டும் நிலைக்க வைக்க வேண்டும். “நான் யார்?” என்ற சுய விசாரணை தான் எல்லா துயரத்தையும் அகற்றி, மிக்க உயர்வான பேரானந்தம் பெற பிரதானமான வழிமுறையாகும்.

இந்த விதத்தில், மனம் தனது சொந்த நிலையில் மிகவும் அமைதியாக ஆகும் போது, ஆன்ம ஞானம் ஒரு தடங்கலும் இல்லாமல் தானாகவே எழுகிறது. அதற்குப் பிறகு புலன் சார்ந்த இன்பங்களும் துன்பங்களும் மனதை பாதிக்காது. எல்லா உலக நடவடிக்கைகளும், பற்றுதல் இல்லாமல், ஒரு கனவு போல தோன்றும். ஒருவர் தனது முழு நிறைவான ஆன்ம அனுபவத்தை எப்போதும் மறக்காமல் இருப்பது தான் உண்மையான பக்தி, யோகம், ஞானம், மற்றும் வேறு எல்லா தவங்களும் கட்டுப்பாட்டுப் பயற்சிகளும் ஆகும். இவ்வாறு ஞானிகள் சொல்கின்றனர்.

~~~~~~~~

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Translated from English into Tamil : Vasundhara

~~~~~~~~

குறிப்பு : 

“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.

அவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார்.  திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.  பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

விசார சங்கிரகம் - சுய விசாரணை (13)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (11)
விசார சங்கிரகம் – சுய விசாரணை (12)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!