ரமணர் மேற்கோள் 58
ரமணர் மேற்கோள் 59
ரமணர் மேற்கோள் 57

ரமணர் மேற்கோள் 58

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 118

நிஷ்காம கர்மா (தன்னலமற்ற காரியம்) என்றால் என்ன? வேலூரில் உள்ள ஊர்ஹீஸ் கல்லூரியின் தெலுங்கு பண்டிதர், திரு ரங்காச்சாரி, நிஷ்காம கர்மாவைப் பற்றி கேட்டார். பதில் ஒன்றும் அளிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து, பகவான் மலையின் மீது சென்றார்; பண்டிதர் உள்பட சிலர் அவரைப் பின் தொடர்ந்தனர். வழியில் மிகுந்த முட்கள் கொண்ட ஒரு தடியை பகவான் எடுத்துக் கொண்டார். உட்கார்ந்து, மெதுவாக அதன் மீது வேலை செய்ய ஆரம்பித்தார். முட்கள் வெட்டப்பட்டன; முடிச்சுகள் வழுவழுப்பாக மாற்றப்பட்டன; தடி முழுதும் ஒரு கரகரப்பான இலையின் மூலம் மெருகேற்றி, பளபளக்கச் செய்யப்பட்டது. சுமார் 6 மணி நேரத்திற்கு இந்த செயல் நடைபெற்றது. முள்செறிந்த தடியின் தற்போதைய அற்புத தோற்றத்தைக் கண்டு எல்லோரும் வியந்தனர். அப்போது அங்கு வந்த இடைய பையன், தனது தடியைத் தொலைத்து விட்டதாகச் சொல்லி கவலைப்பட்டான். பகவான் உடனே புதிய தடியை பையனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார். இந்த நிகழ்ச்சி தமது கேள்விக்கு, நடைமுறை-மெய்மையாக கிடைத்த பதில் என்று பண்டிதர் சொன்னார். 

ரமணர் மேற்கோள் 59
ரமணர் மேற்கோள் 57
ரமணர் மேற்கோள் 58

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!