ரமணர் மேற்கோள் 57
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 453
சரி, தவறு, இவை என்ன? ஒரு விஷயத்தை சரியானது என்றோ தவறானது என்றோ மதிப்பிட ஒரு நியமம் ஏதும் கிடையாது. அவரவரது இயல்பின்படியும், சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறும், அபிப்ராயங்கள் வித்தியாசப் படுகின்றன. அவை கருத்துக்களே தவிர வேறொன்றுமில்லை. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் எண்ணங்களை நீக்கி விடுங்கள். நீங்கள் எப்போதும் சரியான முறையில் இருந்து வந்தால், உலகத்திலும் சரியானது நிலவும்.
ரமணர் மேற்கோள் 57