ரமணர் மேற்கோள் 38
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 196
‘நான்’ என்னும் உணர்வு ஒரு உருவுடன் இணைந்திருக்கிறது; ஒருவேளை உடலுடன். தூய ஆன்மாவுடன் எதுவும் இணைந்திருப்பதில்லை. ஆன்மா எதனுடனும் இணையாது உள்ள தூய உண்மை சுயநிலை. அதன் பிரகாசத்தில் தான், உடல், ‘நானுணர்வு’ முதலிய எல்லாம் ஒளிர்கின்றன. எண்ணங்களையெல்லாம் அசைவற்று நிறுத்திய பின், தூய சுய உணர்வு நிலை மட்டுமே எஞ்சி உறைகின்றது.
ரமணர் மேற்கோள் 38