ரமணர் மேற்கோள் 2
பக்தர்: அறியாமை என்றால் என்ன?
ரமணர்: யாருக்கு அறியாமை? விசாரித்துத் தெரிந்துக் கொண்டால் அறியாமை மறைந்து விடும். பொதுவாக மனிதர்கள் அறியாமையைப் பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புகிறார்களே தவிர, யாருக்கு அது உள்ளது என்று விசாரிப்பதில்லை. இது முட்டாள்தனம். அறியாமை யாருக்கும் தெரியாமல் வெளியில் உள்ளது. ஆனால் விசாரிப்பவர் யார் என்பதும் அவர் உள்ளே உறைபவர் என்பதும் தெரிந்த விஷயம். தூரத்தில், தெரியாமல் இருப்பதைப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்வதை விட்டு விட்டு, அண்மையில், அந்தரங்கத்தில் உள்ளதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ரமணர் மேற்கோள் 2