விசார சங்கிரகம் - சுய விசாரணை
விசார சங்கிரகம் - சுய விசாரணை (1)

விசார சங்கிரகம் – அறிமுகவுரை

 

“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 21 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.

ரமணரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். ரமணர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா திரு ரமண பகவான் விரூபாக்ஷ குகையில் வசித்த காலத்தில் பகவானிடம் வரலானார். அது முதல் பகவானின் எளிய தொண்டனாய் தன்னைக் கருதிக் கொண்டு குகையை துப்புரவாக வைத்துக் கொள்வது முதல் பல தொண்டுகளை செய்து வந்தார். அவருக்கு ராஜ யோகம் போன்றவற்றில் ஈடுபாடு இருந்தது. ராஜ ஞான யோகங்கள் பற்றி ஸ்வாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைகளை படித்து வந்தார். அதில் எழும் சந்தேகங்களை பகவானிடம் காட்டி நிவர்த்தி செய்துக் கொள்வது உண்டு. 

இவ்வாறு கம்பீரம சேஷய்யா பகவான் ரமண மகரிஷியிடம் கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத் துண்டுகளில் எழுதி பதில்கள் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார்.  திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. அதை திரு சிவப்பிரகாசம் பிள்ளை திருத்தி அமைத்தார். பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்கள் என்ற முறையில் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் “விசார சங்கிரகம்” (சுய விசாரணை வினா விடை தொகுப்பு) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.  பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

விசார சங்கிரகம் - சுய விசாரணை (1)
விசார சங்கிரகம் – அறிமுகவுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!