அருணாசல தீபதர்சன தத்துவம்
இத்தனுவே நானா மெனுமதியை நீத்தப்
புத்தியித யத்தே பொருந்தியக நோக்கா
லத்துவித மாமெய் யகச்சுடர்காண் கைபூ
மத்தியெனு மண்ணா மலைச்சுடர்காண் மெய்யே.
–ஸ்ரீ பகவான்
பொருள்:
இந்தச் சரீரமே நான் என்று நினைக்கும் மனதை (தேகாத்ம புத்தியை) நீக்கி, உள்முக திருஷ்டியால் இதயத்தில் நிலையாக ஒன்றி, ஏகசத்தாகிய உள் ஒளியின் உண்மை சொரூபத்தை உணர்வதே, பூமியின் இதய ஸ்தானமாகக் கூறப்படும் அருணாசல சிகரத்தில் விளங்கும் ஜோதியின் உண்மை தரிசனமாகும்.
ஶ்ரீ ரமணாச்ரமம் நூல் திரட்டு
அருணாசல தீபதர்சன தத்துவம்