அருணாசல பஞ்சரத்னம் திரு ரமண மகரிஷி (வெண்பா) 1. அருணிறை வான வமுதக் கடலே விரிகதிரால் யாவும் விழுங்கு மருண கிரிபரமான் மாவே கிளருளப்பூ நன்றாய் விரிபரிதி யாக விளங்கு. பொருள்: அருள்மயமாக நிறைந்த அமுத சொரூபக் கடலே! விரிந்து பரந்த ஞான ஒளிக்கிரணங்களால் அகில வஸ்துக்களையும், தன்னுள் விழுங்குகின்ற அருணாசலமென்னும் மலைவடிவ பரம்பொருளே! […]
You are browsing archives for
Category: அருணாசல ஸ்துதி
அருணாசல அஷ்டகம்
அருணாசல அஷ்டகம் அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்) 1. அறிவறு கிரியென வமர்தரு மம்மா வதிசய மிதன்செய லறிவரி தார்க்கு மறிவறு சிறுவய ததுமுத லருணா சலமிகப் பெரிதென வறிவினி லங்க வறிகில னதன்பொரு ளதுதிரு வண்ணா மலையென வொருவரா லறிவுறப் பெற்று மறிவினை மருளுறுத் தருகினி லீர்க்க வருகுறு மமயமி தசலமாக் கண்டேன். பொருள்: […]
அருணாசல பதிகம்
திரு ரமண மகாமுனிவர் அருளிய அருணாசல பதிகம் (எழுசீர்விருத்தம்) 1. கருணையா லென்னை யாண்டநீ யெனக்குன் காட்சிதந் தருளிலை யென்றா லிருணலி யுலகி லேங்கியே பதைத்திவ் வுடல்விடி லென்கதி யென்னா மருணனைக் காணா தலருமோ கமல மருணனுக் கருணனா மன்னி யருணனி சுரந்தங் கருவியாய்ப் பெருகு மருணமா மலையெனு மன்பே. பொருள்: மாண்புமிக்க அருணாசலம் என்னும் […]
அருணாசல நவமணி மாலை
திரு ரமண மகாமுனிவர் அருளிய அருணாசல நவமணிமாலை (வெண்பா) 1. அசலனே யாயினு மச்சவை தன்னி லசலையா மம்மையெதி ராடு மசல வுருவிலச் சத்தி யொடுங்கிட வோங்கு மருணா சலமென் றறி. பொருள்: பரமேச்வரன் சுபாவத்தில் சலனமற்றவரே ஆனாலும், சிதம்பர பொற்சபையில் பராசக்தியின் எதிரில் நடனம் ஆடுகின்றார். ஆனால் அந்தப் பராசக்தி இங்கு அருணாசல […]
அருணாசல அக்ஷர மணமாலை
அருணாசல அக்ஷர மணமாலை Arunachala Akshara Manamalai – Absorption (Vasundhara and Thyagarajan) OM Shanti Shanti Shanti Hi BLISSFUL BEING Arunachala Akshara Manamalai (Sri Ramana Maharshi) பாடலில் முதல் 32 வரிசைகள் இசைத்த பின் 107வது வரிசைக்குச் சென்று முடிவு வரைச் செல்கிறது. ஆயினும் எல்லா […]
அருணாசல மாகாத்மியம்
அருணாசல மாகாத்மியம் நந்திவாக்கு : (விருத்தம்) 1. அதுவேதல மருணாசலந் தலம்யாவிலு மதிக மதுபூமியி னிதயம்மறி யதுவேசிவ னிதயப் பதியாமொரு மருமத்தலம் பதியாமவ னதிலே வதிவானொளி மலையாநித மருணாசல மெனவே. பொருள்: புண்ணிய ஸ்தலங்களில் தலையாயது அருணாசலமே. மற்றெல்லா ஸ்தலங்களைக் காட்டிலும் மகிமை மிகுந்ததுவும் அதுவே. அது பூமியின் இதயமும் ஈச்வரனின் இதய ஸ்தலமுமாகும். அது […]
அருணாசல தீபதர்சன தத்துவம்
அருணாசல தீபதர்சன தத்துவம் இத்தனுவே நானா மெனுமதியை நீத்தப் புத்தியித யத்தே பொருந்தியக நோக்கா லத்துவித மாமெய் யகச்சுடர்காண் கைபூ மத்தியெனு மண்ணா மலைச்சுடர்காண் மெய்யே. –ஸ்ரீ பகவான் பொருள்: இந்தச் சரீரமே நான் என்று நினைக்கும் மனதை (தேகாத்ம புத்தியை) நீக்கி, உள்முக திருஷ்டியால் இதயத்தில் நிலையாக ஒன்றி, ஏகசத்தாகிய உள் ஒளியின் […]







