Skip to main content

Ramana Maharshi – All Posts

மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது

மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்கள் செயல்களையும் விளைவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு விடும்

மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்கள் செயல்களையும் விளைவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு விடும் ஒரு பண்புள்ள அமெரிக்கர், திரு ஜே. எம். லோரி என்பவர்,  ஆஸ்ரமத்தில் இரண்டு மாதமாக தங்கிக்கொண்டிருக்கிறார். அவர் கேட்டார்: நான் இன்று இரவு இங்கிருந்து செல்கிறேன். இந்த இடத்தை விட்டு மனமில்லாமல் அகலுவதற்கு என் மனம் மிகவும் துன்புறுகிறது. ஆனால் நான் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும். நான் மகரிஷியிடம் ஒரு அறிவுரை கேட்கிறேன். என்னைப் பற்றி என்னை விடக் கூட மகரிஷி […]

52. தெளிவான மனமும் மந்தமான மனமும் | மரணத

52. தெளிவான மனமும் மந்தமான மனமும், மரணத்திற்கு பிறகு ஜீவன், தியானம் என்றால் என்ன

52. தெளிவான மனமும் மந்தமான மனமும் | மரணத்திற்கு பிறகு ஜீவன் | தியானம் என்றால் என்ன   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 9, 1935 உரையாடல் 52. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா   ஒரு வருகையாளர் கேட்டார் : என் மனம் இரண்டு மூன்று நாட்களுக்குத் தெளிவாக இருக்கிறது. பிறகு அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மந்தமாக இருக்கிறது. இப்படியே அது மாறி மாறி வருகிறது. அது எதனால்? மகரிஷி: அவ்வாறு இருப்பது […]

தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் க

தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள்

தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 594. ஒரு ஸ்பானிஷ் பெண்மணி, இங்கு தற்காலிகமாக தங்கிக்கொண்டிருக்கும் சுரங்கப் பொறியாளருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறாள். அவள் அதில் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறாள். அதில் ஒரு கேள்வி பின்வருமாறு. “தனிப்பட்ட தான்மையானது, உலகளாவிய சொரூப ஆன்மாவில் இணைந்து ஒன்று சேர்ந்து விட்டால், பிறகு மனித குலத்தின் உயர்வுக்காக ஒருவர் எப்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்வது?”  இந்தக் கேள்வி வெளிநாட்டு சிந்தனையாளர்களுக்கு பொதுவாக […]

இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத

இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத்தியமா?

இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத்தியமா   இப்படி சிலருக்கு சந்தேகம் எழுகிறது. இந்த காலத்தில் இள வயதினர், பணம் பொருள் சேற்பது தான் வாழ்க்கையில் சந்தோஷம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, ஆன்மாவின் தேடல் எல்லாம் இளமையில் நடைமுறைக்கு சாத்தியமா? இந்தக் கேள்வி எழுகிறது.   பொதுவாக, மற்றவர்களை எப்படி ஆன்மீகத்தில் ஈடுபடச் செய்வது என்ற முறையில் யாராவது கேள்வி கேட்டால், மகரிஷி  பின்வருமாறு பதில்கள் தருவார்.    ஒரு பக்தர்: நாம் மற்றவர்களை நாடி […]

தியானத்தில் வலிகளையும் இன்னல்களையும் வெல

தியானத்தில் வலிகளையும் இன்னல்களையும் வெல்வது எப்படி

தியானத்தில் வலிகளையும் இன்னல்களையும் வெல்வது எப்படி உரையாடல் 462. ஒரு பெண்மணி மகரிஷியிடம் கேள்விகள் கேட்டு உதவி பெற மிகவும் ஆவலாக இருந்து வந்தாள். அவள் மிகவும் தயக்கத்துடன் அவரை அணுகி தனது இன்னல்களை மெதுவாக விவரித்தாள். அவளது சொற்கள் பின்வருமாறு.   திடீர்ரென்று எழும் நெஞ்சுத் துடிப்புகளாலும், வேகமான மூச்சுகளாலும், ஒருமுக கவனம் செலுத்துவதற்கு நான் செய்யும் முயற்சிகள் தடுக்கப்பட்டு அல்லல் தருகின்றன. பிறகு என் எண்ணங்களும் விரைந்தோடி செல்கின்றன; அவை கட்டுப்படுத்த முடியாமல் போய் […]

 
↓
error: Content is protected !!