Skip to main content

விசார சங்கிரகம் – சுய விசாரணை (6)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (6) (6) பக்தர்:   உட்புற உறுப்புகளில் – மனம் (சிந்தனை), புத்தி (அறிவு), சித்தம் (நினைவு), அகங்காரம் (தான்மை) – இப்படி பல வித மாற்றங்கள் உள்ளன. அப்படி இருக்கும்போது, மனதின் நாசம் மட்டுமே முக்தி என்று எப்படி சொல்ல முடியும்? மகரிஷி: மனதைப் பற்றி விளக்கம் தரும் நூல்களில், இவ்வாறு சொல்லப்படுகிறது : “நாம் உண்ணும் உணவின் நுண்ணிய பகுதி திடமாக திரண்டுக் கொண்டு மனமாக உருவாக்கப்படுகிறது; […]

விசார சங்கிரகம் – சுய விசாரணை (5)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (5)   (5) பக்தர்: சுய விசாரணை என்ற வழிமுறை, ஸ்தூல உடல் தான் ஆன்மா என்ற பொய்யான நம்பிக்கையை விலக்குவதற்கு மட்டும் தானா? அல்லது அது அந்த பொய்யான நம்பிக்கையை நுட்பமான, பூர்வ மனப்போக்குகளான உடல்களிலிருந்தும் விலக்குவதற்காக உள்ள வழிமுறையா? மகரிஷி: ஸ்தூல உடலின் மீது தான் மற்ற உடல்களும் உள்ளன. “உடல் தான் நான்” என்ற பொய்யான நம்பிக்கையில், ஐந்து உறைகளைக் கொண்ட மூன்று வித உடல்களும் […]

விசார சங்கிரகம் – சுய விசாரணை (4)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (4)   (4) பக்தர்: ஒருவர் “நான்” என்ற முறையில் எழும் ‘தான்மை அகங்காரத்தின்’ மூலத்தைப் பற்றி விசாரிக்கும்போது, எண்ணிலடங்காத பல வித எண்ணங்கள் எழுகின்றன; தனியாக “நான்” என்னும் எண்ணம் இல்லை. மகரிஷி: நான் என்னும் “தன்மை” தோன்றினாலும் தோன்றாவிட்டாலும், வாக்கியங்களில் தோன்றும் மற்றவை எல்லாம், தன்மையைத் தான் மூலாதாரமாகக் கொண்டுள்ளன. அதே போல் உள்ளத்தில் தோன்றும் எல்லா எண்ணங்களும், முதல் மன நிலையான “நான்” என்ற தான்மையை, […]

விசார சங்கிரகம் – சுய விசாரணை (3)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (3)   (3) பக்தர்:   “நான் யார்?” என்று ஒருவர் விசாரணை செய்வது எப்படி? மகரிஷி: ‘போவது’, ‘வருவது’ போன்ற செயல்கள் எல்லாம் உடலைச் சார்ந்தவையன்றி வேறில்லாததால், உடலே  தான் “நான்” என்று சொல்வது போல தெரிகிறதில்லையா? பிறப்பதற்கு முன்னால் உடலே இல்லாததாலும், பஞ்ச பூதங்களால் ஆன, ஐந்து தனிமங்களால் உருவாக்கப்பட்டதாலும், ஆழ்ந்த தூக்கத்தில் இல்லாததாலும், இறந்த பிறகு சடலமாவதாலும், அந்த உடலை “நான்” என்னும் போதமாக, அறிவாக, […]

விசார சங்கிரகம் – சுய விசாரணை (2)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (2) (2) பக்தர்: தனது யதார்த்த சொரூபத்தை விசாரித்து உணர்வது என்றால் என்ன? மகரிஷி: “நான் சென்றேன்”, “நான் வந்தேன்”, “நான் இருந்தேன்”, “நான் செய்தேன்” என்பது போன்ற அனுபவங்கள் எல்லாம் எல்லோருக்கும் இயல்பாகவே சுபாவமாகவே வருகின்றன. இந்த அனுபவங்களிலிருந்தெல்லாம், “நான்” என்ற ஒரு போதம், ஒரு அறிவு தோன்றுகிறது இல்லையா? அந்த “நான்” என்ற போதத்தின் உண்மை வடிவை விசாரித்து, தானாக இருப்பதே தனது யதார்த்த சொரூபத்தை விசாரித்து […]

விசார சங்கிரகம் – சுய விசாரணை (1)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (1) பகவான் திரு ரமண மகரிஷி மங்களம் மிகவும் உயர்வான பராபரத்தில் உறுதியாக உறைந்து இருப்பதைத் தவிர, அதை வணங்குவதற்கு வேறு ஒரு வழி உள்ளதா! (1) பக்தர்: ஸ்வாமி! எப்போதும் துக்கமற்ற நித்யானந்த நிலை எய்துவதற்கு உரிய உபாயம் யாது? மகரிஷி: எங்கு உடல் உள்ளதோ அங்கு துயரம் இருக்கும் என்று வேதத்தில் உள்ள அறிக்கையோடு கூட, இது தான் எல்லோருக்கும் உள்ள நேரடியான அனுபவமும் கூட.  எனவே, ஒருவர் எப்போதும் […]

விசார சங்கிரகம் – அறிமுகவுரை

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – அறிமுகவுரை   “விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 21 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார். ரமணரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் […]

 
error: Content is protected !!