Skip to main content

20. தனிமை | மௌனம் | சித்திக்கள்

Talks with Ramana Maharshi (20)

20. தனிமை | மௌனம் | சித்திக்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஜனவரி 29, 1935 திரு க்ரான்ட் டப் கேட்டார்: நினைவும், மறதியும் எங்கே உள்ளது? மகரிஷி: மனதில் (சித்தம்). ஜனவரி  30, 1935 திரு எவன்ஸ் வென்ட்ஸ்: ஒரு ஞானிக்கு தனிமை அவசியமா? மகரிஷி.: தனிமை மனிதனின் மனதில் உள்ளது.  ஒருவர் அடர்ந்த உலகில் இருந்துக்கொண்டே மனதில் அமைதியை நிலை நிறுத்தி வைக்கலாம்; இப்படிப்பட்டவர் தனிமையில் உள்ளார். மற்றொருவர் […]

19. நினைவும் மறதியும்

Talks with Ramana Maharshi (18 - 19)

19. நினைவும் மறதியும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு க்ரான்ட் டப் கேட்டார்: நினைவும், மறதியும் எங்கே உள்ளது? மகரிஷி: மனதில் (சித்தம்).   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 ஜனவரி 29, 1935 உரையாடல் 19.

18. யோகிகளும் மாய வித்தைகளும்

Yogis and occult powers

18. யோகிகளும் மாய வித்தைகளும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு எவன்ஸ் வென்ட்ஸ் கேட்டார்: மாய வித்தைகள் கொண்ட யோகிகள் உள்ளனர். அவர்களைப் பற்றி மகரிஷி என்ன நினைக்கிறார்? மகரிஷி:  இந்த சக்திகள் செவிவழிச் செய்தியாலோ அல்லது கண்காட்சியாலோ தெரிய வருகின்றன. எனவே அவை மனப் பிரதேசத்தில் மட்டுமே உள்ளன.  பக்தர்.: சென்னையில் வாழும் ஒரு யோகி, இமய மலையில் உள்ள தமது ஆசானுடன் ஆன்மீக தொடர்பு வைத்துக் கொள்வதாக திரு ப்ரன்ட்டன் சொல்கிறார்.  […]

17 E. ஆன்ம ஞானமும் பேரானந்தமும்

Talks with Ramana Maharshi (17 E)

17 E. ஆன்ம ஞானமும் பேரானந்தமும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு எவன்ஸ்-வென்ட்ஸ் ஆன்ம ஞானத்தைப் பற்றியும் “பரிபூரண மோன நிலை” (சமாதி) பற்றியும் கேள்விகள் கேட்டார்.  பக்தர்.: ஆன்ம ஞானம் பெற மகரிஷிக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது?  மகரிஷி.: பெயரும், தோற்றமும் காணப்படுவதால் இந்த கேள்வி கேட்கப் படுகிறது. தான்மை உணர்வு ஊன உடலுடன் இணைந்துக் கொள்வதால் இந்த தோற்றங்கள் உள்ளன. தான்மை உணர்வு (ego), கனவில் உள்ளது போல், […]

17 D. போரும் கடுங்குற்றமும்

Talks with Ramana Maharshi (17 D)

17 D. போரும் கடுங்குற்றமும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு எவன்ஸ் வென்ட்ஸ் உயிர் இழப்பு பற்றி கேட்டார்.  பக்தர்.: கடவுள் எல்லாவற்றிலும் உறைந்து இருப்பதால், யாரும் எவ்வித உயிரையும் அழிக்கக்கூடாது. சமூகம் ஒரு கொலைகாரனின் உயிரை எடுப்பது சரியா? அரசாங்கம் கூட அப்படி செய்யலாமா? கிறிஸ்துவ நாடுகள் கூட அது தவறு என்று நினைக்க ஆரம்பித்துள்ளன.  மகரிஷி.: கொலைகாரனை கொலை செய்யும்படி தூண்டி விட்டது எது? அதே சக்தி தான் […]

17 C. வேலை | பயிற்சி | பிரம்மச்சரியம்

Talks with Ramana Maharshi (17 C)

17 C. வேலை | பயிற்சி | பிரம்மச்சரியம் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு எவன்ஸ் வென்ட்ஸ், பெரும்பாலும் யோகப் பயிற்சியின் முன்னோட்டமான அடிப்படைகளைப் பற்றிய கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அவற்றிற்கெல்லாம் மகரிஷி, எல்லொருக்கும் குறிக்கோள் ஆன்ம சுயநிலை அறிவது; அதற்கு யோகப்பயிற்சி துணைப்பொருள்; அடிப்படைகள் எல்லாம் யோகப்பயிற்சிக்குத் துணைப் பொருட்கள், என்று பதிலளித்தார்.   பக்தர்.: ஆன்ம ஞானத்திற்கு வேலை அல்லது தொழில் ஒரு தடங்கலா?  மகரிஷி.: இல்லை. ஒரு ஞானிக்கு ஆன்மா மட்டுமே உண்மை […]

17 B. ஆங்கிலேய அறிஞர் மேலும் கேள்விகள் க

English scholar asks more questions

17 B. ஆங்கிலேய அறிஞர் மேலும் கேள்விகள் கேட்கிறார் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: ஆழ்நிலை தியானம் செய்ய தகுந்த நேரம் எது? மகரிஷி: நேரம் என்றால் என்ன? பக்தர்.: அது என்னவென்று எனக்குச் சொல்லுங்கள்! மகரிஷி.: நேரம் ஒரு கருத்து தான். உண்மை சுயநிலை ஒன்று தான் உள்ளது. அது என்னவென்றெல்லாம் நீங்கள் நினைக்கிறீர்களோ, அது போலவே அது காணப்படுகிறது. அதை நீங்கள் நேரம் என்று அழைத்தால், அது நேரமாகிறது. […]

17 A. ஆங்கிலேய அறிஞரின் கேள்விகள்

Talks with Ramana Maharshi (17 A)

17 A. ஆங்கிலேய அறிஞரின் கேள்விகள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு W. Y. எவன்ஸ்-வென்ட்ஸ் என்பவர், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் கலாசாலையில் ஒரு ஆங்கிலேய அறிஞர். அவர் திரு பால் ப்ரன்ட்டன் கொடுத்த ஒரு அறிமுகக் கடிதத்துடன் மகரிஷியைச் சந்திக்க வந்தார்.  பயணத்தால் மிகவும் களைப்படைந்ததால், அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது. அவர் பாரத நாட்டுக்கு பல முறை வந்திருப்பதால், இந்திய வாழ்க்கை வழிமுறைகளில் பழக்கப்பட்டவர். அவர் திபெத்திய மொழியைக் கற்றுக்கொண்டு, ‘இறந்தவரின் […]

16 B. துக்கம் அனுசரிக்க காரணம் இல்லை

No reason to mourn

16 B. துக்கம் அனுசரிக்க காரணம் இல்லை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஐரோப்பிய விருந்தாளி பிரிந்து சென்ற ஆன்மாக்களைப் பற்றியும் அவர்களுக்கு சேவை செய்ய சிறந்த முறை எதுவென்றும் கேட்டார்.  பிரிந்து சென்ற ஆன்மாக்களைப் பற்றிய கேள்விக்கு விளக்கம் : ஒருவர் தன்னை தன் உடலோடு இணைத்திருக்கும் வரை, தோற்றங்களாக வெளிப்படுத்தப்பட்ட எண்ணம், அவருக்கு உண்மையாக இருக்கும். தன் உடல் மற்றொரு உடலிலிருந்து ஏற்பட்டதாக கற்பனை செய்துக் கொண்டிருப்பதால், தன் உடல் எவ்வளவு […]

16 A. மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி

Talks with Ramana Maharshi (16)

16 A. மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு டக்லஸ் ஏன்ஸ்லி (க்ரான்ட் டப்) என்ற  70 வயதுள்ள ஆங்கிலேய கனவான், தமிழ் நாட்டின் முந்தைய ஆளுனரின் உடன்பிறந்தவரின் மகன். அவர் ஒரு எழுத்தாளர், கவிஞர். இதற்கு முன்பு ஏதென்ஸ், பாரீஸ், ஹேக் முதலிய இடங்களில் இருந்த இங்கிலாந்தின் தூதர் அலுவலகத்துடன் இணைப்பு வைத்திருந்தார். அவர் சென்னையின் அரசாங்க இல்லத்தில் விருந்தாளியாக வந்திருந்தார். அவர் திரு பால் ப்ரன்ட்டன் […]

15. உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது

Talks with Ramana Maharshi (14 - 15)

15. உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா உபநிஷதத்தின் ஒரு வாசகத்தைப் பற்றி கேள்வி கேட்கப் பட்டது : “தனிமுதன்மையான உச்ச உயர்வான ஆன்மா, நுட்பமானவற்றையெல்லாம் விட நுட்பமானது, மிகப் பெரியதானவற்றையெல்லாம் விட பெரியது.” மகரிஷி.: அணுவின் அமைப்பு கூட மனதால் தான் காணப்படுகிறது. எனவே மனம் அணுவை விட நுட்பமானது. மனதுக்குப் பின்னால் உள்ளது, அதாவது தனிப்பட்ட ஆன்மா, மனதை விட நுட்பமானது. மேலும், தமிழ் முனிவர் […]

14. ஆன்ம ஞானம் விவரிப்புக்கு அப்பால் உள்

Realization exists beyond expression

14. ஆன்ம ஞானம் விவரிப்புக்கு அப்பால் உள்ளது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வயதானவர் வந்து கூடத்தில் அமர்ந்தார். மகரிஷி அப்போது சர்மாவின், அருணசல அக்ஷர மணமாலையின் திருத்தப்பட்ட சமஸ்கிருத பதிப்பைப் படித்துக் கொண்டிருந்தார். (அருணசல அக்ஷர மணமாலை, அருணசலர் மீது மகரிஷி அளித்து அருளிய தெய்வீகப் பாடல்களில் முதலாவதாகும்.) வந்தவர் மென்மையாகக் கேட்டார்: ஆன்மஞானம் வெளிப்படுத்தி விவரிப்பதற்கு அப்பாற்பட்டதாகும் என்று சொல்லப் படுகிறது; வெளிப்பாடும் எந்த சமயத்திலும் ஆன்ம ஞானத்தை வர்ணிப்பதில் […]

 
↓
error: Content is protected !!