54. மெய்யான ஆன்மா | எண்ணங்கள் கட்டுப்பாடு | சூழ்நிலைகளின் விளைவு | மூச்சுக் கட்டுப்பாடு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 16, 1935 உரையாடல் 54. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வயதான பண்டிதருக்கு, கணபதி முனி அத்வைதத்தின் மேல் அளித்த விளக்கவுரையைப் பற்றி சில சந்தேகங்கள் எழுந்தது. அவர் சில நூல்களில் இதைப் பற்றி முரண்பாடுகள் கண்டார். மகரிஷி சொன்னார் : தக்ஷிணாமூர்த்தி அந்த மாதிரி ஏதும் கற்பிக்கவில்லை. அவர் மௌனமாக இருந்தார். […]
You are browsing archives for
Category: எண் வரிசைப்படி உரையாடல்கள்
ரமண மகரிஷியுடன் நிகழ்ந்த இந்த உரையாடல்கள் புத்தகத்தில் உள்ள எண் வரிசைப்படி இங்கு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உரையாடலும் எந்த விதத்திலாவது மிகுந்த உதவி அளிக்கும். தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா.
53. இந்த “நான்” யார்? யாருக்கு சந்தேகம்
53. இந்த “நான்” யார்? யாருக்கு சந்தேகம் எழுகிறது? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 15, 1935 உரையாடல் 53. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வாலிபர், திரு நோல்ஸ் என்பவர், மகரிஷியின் தர்சனம் பெற வந்தார். அவர் திரு பால் ப்ரண்ட்டனின் இரண்டு புத்தகங்களைப் படித்திருக்கிறார். அவர் கேட்டார் : “புத்த மதத்தினர் “நான்” என்பது பொய்யானது என்கிறர்கள். ஆனால், பால் ப்ரண்ட்டன் தமது “ரகசிய பாதை” என்ற நூலில், “நான் – எண்ணத்தை” […]
52. தெளிவான மனமும் மந்தமான மனமும் | மரணத
52. தெளிவான மனமும் மந்தமான மனமும் | மரணத்திற்கு பிறகு ஜீவன் | தியானம் என்றால் என்ன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 9, 1935 உரையாடல் 52. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வருகையாளர் கேட்டார் : என் மனம் இரண்டு மூன்று நாட்களுக்குத் தெளிவாக இருக்கிறது. பிறகு அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மந்தமாக இருக்கிறது. இப்படியே அது மாறி மாறி வருகிறது. அது எதனால்? மகரிஷி: அவ்வாறு இருப்பது […]
43. இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி | ம
43. இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி | மனக் கட்டுப்பாடு | மெய்யான “நான்” – பொய்யான “நான்” ரமண மகரிஷியுடன் உரையாடல்கள். உரையாடல் 43. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா சில பக்தர்கள் ஆஸ்ரமத்திற்கு வந்தார்கள். அவர்கள் ரங்கநாதன், ராமமூர்த்தி, ராகவைய்யா. திரு ரங்கநாதன் கேட்டார். மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தயவுசெய்து அறிவுரை தர வேண்டும். மகரிஷி: அதற்கு இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று, மனமென்றால் என்ன என்று பார்ப்பது. அப்படி பார்த்தால், மனம் தணிந்து அடங்கும். […]
42. பிரக்ஞை உணர்வின் திடீர் ஒளிகளைப் பெற
42. பிரக்ஞை உணர்வின் மின்னல் போன்ற திடீர் ஒளிகளைப் பெறுவது எப்படி? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 42. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு டங்க்கன் க்ரீன்லீஸ், மதனபள்ளியிலிருந்து பின்வருமாறு கடிதம் எழுதினார் :- ஒருவருக்கு சில சமயங்களில், ஒரு பிரக்ஞை உணர்வின் தெளிவான, மின்னல் போன்ற திடீர் ஒளிகள் வருகின்றன. அந்த பிரக்ஞை உணர்வின் நடு மையம் சாதாரண சுயத்திற்கு வெளிப்புறத்திலும் உள்ளுக்குள்ளும் இருப்பதாகத் தெரிகிறது. மனதை வேதாந்த கருத்துக்களால் பாதிக்காமல், இந்த திடீர் ஒளிகளைப் […]
41. சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா
41.சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 41. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்: சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா? மகரிஷி: அங்கு போவதற்கு யாராவது இருக்க வேண்டும். அவை கனவுகள் போன்றவை. கனவில் கூட நேரமும் இடமும் இருப்பதை நாம் பார்க்கிறோம். இதில் எது உண்மை, கனவா அல்லது விழிப்பா? பக்தர்: எனவே நாம் நம்மிடம் உள்ள காமம், குரோதம் போன்றவற்றை நீக்கி விட வேண்டும். மகரிஷி: எண்ணங்களை விட்டு விடுங்கள். வேறு எதையும் விட வேண்டிய அவசியமில்லை. எதையும் […]
34 – 40. ஆன்ம ஞானம் | கர்மா | செயல்கள் |
34 – 40. ஆன்ம ஞானம் | கர்மா | செயல்கள் | இறந்தவரைக் காண்பது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா ~~~~~~~~ பிப்ரவர் 4, 1935 ~~~~~~~~ உரையாடல் 34. ஒரு பக்தர், யோகி ராமய்யா, மகரிஷியின் அறிவுரைகளைப் பின்பற்றியதால் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். அவர் சொன்னார் : மகரிஷியின் முன்னிலையில் உட்கார்ந்து இருப்பது மனதுக்கு அமைதி கொண்டு வருகிறது. நான் இடைவிடாமல் மூன்று, நான்கு மணி நேரத்திற்கு, பூரண அமைதியில் […]
33. உலகம் மாயையா அல்லது மெய்மையா
33. உலகம் மாயையா அல்லது மெய்மையா ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வருகையாளருடன் உரையாடல். பக்தர்: “மிக உயர்ந்த ஆன்ம சுய சொரூபம் (பிரம்மம்) மெய்மையாகும். உலகம் மாயையாகும்” என்பது திரு சங்கராசாரியாரின் வழக்கமான வாக்கியமாகும். ஆனால், வேறு சிலர், “உலகம் மெய்மை தான்” என்று சொல்கிறார்கள். இதில் எது உண்மை? மகரிஷி: இரண்டு வாக்கியங்களும் உண்மை தான். அது ஆன்மீக வளர்ச்சியின் பலவித நிலைப்படிகளைப் பொருத்து குறிப்பிடப்படுகிறது. அது வெவ்வேறு நோக்கங்களிலிருந்து […]
32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள
32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வருகையாளருடன் உரையாடல். பக்தர்: புனிதர்களான திரு சைதன்யரும், திரு ராமகிருஷ்ணரும் கடவுளுக்கு முன்னால் கண்ணீர் சிந்தி வெற்றி அடைந்தனர். இந்த பாதை தான் பின்பற்றப் பட வேண்டும், இல்லையா? மகரிஷி: ஆமாம். அவர்களை அந்த அனுபவங்களில் எல்லாம் ஒரு மிகவும் பலமான சக்தி இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தது. உங்களுடைய குறிக்கோளை அடைய அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள். சாதாரணமாக, […]
31. மோட்சம் | பயிற்சி | ஒருமுக கவனம் | ச
31. மோட்சம் | பயிற்சி | ஒருமுக கவனம் | சரணாகதி | பிரச்சனை தீர்வு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு பக்தர் கேட்டார்: மோட்சம் அடைவது எப்படி? மகரிஷி.: மோட்சம் என்றால் என்ன என்று அறிந்துக் கொள்ளுங்கள். பக்தர்: நான் அதற்காக உபாசனை செய்ய வேண்டுமா? மகரிஷி: உபாசனை மனக் கட்டுப்பாட்டிற்காகவும் ஒரு முக கவனத்திற்காகவும் செய்யப்படுகிறது. பக்தர்: நான் மூர்த்தி தியானம், அதாவது ஒரு கடவுளின் உருவச் […]
30. “நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொ
“நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு நடேச அய்யர், தமிழ் நாட்டின் ஒரு நகரத்தில் வழக்கறிஞர்களின் தலைவர், மகரிஷியைக் கேட்டார்: “ஈஸ்வரர் அல்லது விஷ்ணு, அவர்களது புனித க்ஷேத்திரங்களான கைலாசம், வைகுண்டம், இவையெல்லாம் மெய்யானவையா? மகரிஷி.: நீங்கள் இந்த உடலில் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை. பக்தர்.: என் உடல் போல், அவர்களுக்கு ஒரு நிகழ்வு சார்ந்த, வியவகார உள்ளமை இருக்கிறதா? அல்லது அவர்கள் […]
29. தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்ற
தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்றாகச் செல்கின்றன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு சமயம், மாலைப் பொழுது அமைதியாகவும் மேகமூட்டமாகவும் இருந்தது. சிறிதளவு தூறல் போட்டுக்கொண்டிருந்தது. அதனால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது. ஆஸ்ரம கூடத்தின் சன்னல்கள் மூடப்பட்டிருந்தன. மகரிஷி வழக்கம் போல் ஸோபாவின் மேல் அமர்ந்திருந்தார். அவரெதிரில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். சில வருகையாளர்கள் கடலூரிலிருந்து வந்திருந்தனர். பக்தர்களில் ஒரு துணை நீதிபதியும், அவருடன் இருந்த இரண்டு வயதான பெண்டிரும் இருந்தனர். துணை […]