16 A. மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திரு டக்லஸ் ஏன்ஸ்லி (க்ரான்ட் டப்) என்ற 70 வயதுள்ள ஆங்கிலேய கனவான், தமிழ் நாட்டின் முந்தைய ஆளுனரின் உடன்பிறந்தவரின் மகன். அவர் ஒரு எழுத்தாளர், கவிஞர். இதற்கு முன்பு ஏதென்ஸ், பாரீஸ், ஹேக் முதலிய இடங்களில் இருந்த இங்கிலாந்தின் தூதர் அலுவலகத்துடன் […]
You are browsing archives for
Category: ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
15. உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது
15. உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உபநிஷதத்தின் ஒரு வாசகத்தைப் பற்றி கேள்வி கேட்கப் பட்டது : “தனிமுதன்மையான உச்ச உயர்வான ஆன்மா, நுட்பமானவற்றையெல்லாம் விட நுட்பமானது, மிகப் பெரியதானவற்றையெல்லாம் விட பெரியது.” மகரிஷி.: அணுவின் அமைப்பு கூட மனதால் தான் காணப்படுகிறது. எனவே மனம் அணுவை விட நுட்பமானது. மனதுக்குப் […]
14. ஆன்ம ஞானம் விவரிப்புக்கு அப்பால் உள்
14. ஆன்ம ஞானம் விவரிப்புக்கு அப்பால் உள்ளது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒரு வயதானவர் வந்து கூடத்தில் அமர்ந்தார். மகரிஷி அப்போது சர்மாவின், அருணசல அக்ஷர மணமாலையின் திருத்தப்பட்ட சமஸ்கிருத பதிப்பைப் படித்துக் கொண்டிருந்தார். (அருணசல அக்ஷர மணமாலை, அருணசலர் மீது மகரிஷி அளித்து அருளிய தெய்வீகப் பாடல்களில் முதலாவதாகும்.) வந்தவர் மென்மையாகக் கேட்டார்: ஆன்மஞானம் வெளிப்படுத்தி […]
13. சாந்தமான குரங்கு | ஆன்மா மட்டுமே உள்
13. சாந்தமான குரங்கு | ஆன்மா மட்டுமே உள்ளது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜனவரி 6, 1935 சாந்தமான குரங்கு திருமதி எம். ஏ. பிக்கட், என்ற ஒரு ஆங்கிலேயப் பெண்மணி, “ரகசிய இந்தியாவில் தேடல்” என்னும் புத்தகத்தைப் படித்து விட்டு, மகரிஷியைச் சந்திக்க வந்தார். மொழி பெயர்க்க, மகரிஷியின் பக்தர் ஒருவரின் சேவை வழங்கப்பட்டது. அப்போது […]
12. எனக்கு ஒன்றும் தெரியாது
12. எனக்கு ஒன்றும் தெரியாது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒருவர் மகரிஷியிடம் எதாவது சொல்லும்படி கேட்டார். அவர் என்ன தெரிந்துக் கொள்ள விரும்புகிறார் என்று கேட்டபோது, அவர் தனக்கு ஒன்றுமே தெரியாதென்றும், மகரிஷியிடமிருந்து ஏதாவது கேட்க விரும்புவதாகவும் சொன்னார். ரமணர்: உங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று உங்களுக்குத் தெரியும். அந்த அறிவை கண்டுப் பிடியுங்கள். அது தான் […]
11. தலைவிதி முடிவடையுமா
11. தலைவிதி முடிவடையுமா ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்: தலைவிதி கர்மம் எப்போதாவது முடிவடையுமா? ரமணர்: தலைவிதியும் கர்மங்களும் தாமே தமது முடிவின் விதைகளை வைத்துக் கொண்டு உள்ளன. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 மே 15, 1935 உரையாடல் 11. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
10. மனதைக் கட்டுப்படுத்தல்
10. மனதைக் கட்டுப்படுத்தல் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் வருகையாளர் ஒருவர், மகரிஷி அருளிய உள்ளது நாற்பது அனுபந்தத்தின் 8வது செய்யுளில்1 உள்ள மகரிஷியின் அறிவுரைகளின்படி, உண்மை தன்னிலையை உணர்வது எப்படி என்று கேட்டார். அவரது கஷ்டம் மனதைக் கட்டுப் படுத்துவதில் இருந்தது. மகரிஷி: மூச்சைக் கட்டுப்படுத்துவதால் மனதைக் கட்டுப்படுத்தலாம். இதை ஒருவர் தாமே வேறு உதவி ஏதுமின்றி […]
9. ஞானியும் குழந்தையும்
9. ஞானியும் குழந்தையும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒருவர் கேட்டார்: மறைநூல்களில் ஏன் ஞானி ஒரு குழந்தையைப் போல என்று சொல்லியுள்ளனர்? மகரிஷி: ஒரு குழந்தையும் ஞானியும் ஒரு விதத்தில் ஒரே மாதிரி தான். நிகழ்ச்சிகள், அவை நிகழும் சமயத்தில் மட்டுமே குழந்தைகளைக் கவரும். நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தவுடன், அவற்றில் ஒரு குழந்தைக்கு ஆர்வம் இருக்காது. […]
8. புனித மந்திரங்கள்
8. புனித மந்திரங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்: “தற்செயலாக கிடைத்த புனித மந்திரங்களை ஜபிப்பதால் எவராக இருந்தாலும் அவருக்கு அதன் பலன் கிடைக்குமா?” மகரிஷி: “இல்லை. ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீக்ஷை பெற்றிருக்க வேண்டும். மகரிஷி இதை பின்வறும் கதையின் மூலம் விளக்கினார். ஒரு மன்னர் […]
7. மாய வித்தைகள்
7. மாய வித்தைகள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பகவானிடம் மாய தந்திர வித்தைகளைப் பற்றி, சித்திக்களைப் பற்றி, கேள்வி கேட்கப்பட்டது. தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தின் கடைசி வரிசையில் சொன்னபடி, சுய ஆன்மாவை உணர்வதின் அனந்தசக்தியுடன் (ஈஸ்வரத்துவம்), தந்திர சாதனைகள் செய்யும் சித்திக்களும் (மாய வித்தைகள் செய்யும் சக்திகள்) அடைய முடியுமா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, மகரிஷி இவ்வாறு […]
6. சஞ்சலப்படும் மனம்
6. சஞ்சலப்படும் மனம் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒரு துறவி, மனதின் கவனச் சிதறலை எப்படி முன்தவிர்த்து தடுப்பது என்பதைப் பற்றி கேள்வியொன்று கேட்டார். மகரிஷி: சுய தன்மையை, ஆன்மாவை மறந்து போவதால், பொருள்களைக் காண்கிறீர்கள். தன்னிலையான ஆன்மாவை பிடித்து வைத்துக் கொண்டால், வெளிப்புற உலகத்தை (ஆன்மாவை விட்டு தனியாக) காண மாட்டீர்கள். ரமண மகரிஷியுடன் […]
5. கடலில் கரைந்த பொம்மை
5. கடலில் கரைந்த பொம்மை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திரு மோரீஸ் ப்ரீட்மன் என்ற ஒரு பொறியாளர், அருள் என்னும் விஷயத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்: “உப்பால் செய்த ஒரு பொம்மை கடலில் மூழ்கும் போது, நீர்காப்பு கொண்ட உடையால் கூட அதை பாதுகாக்க முடியாது.” இது மிக்க மகிழ்ச்சியூட்டும் உவமை என்று எல்லோராலும் பாராட்டப்பட்டது. […]












