ரமணர் மேற்கோள் 3 யோசனை செய்வதற்காக நீங்கள் உய்வது அவசியம். இந்த எண்ணங்களை நீங்கள் எண்ணலாம், அல்லது வேறு எண்ணங்களை எண்ணலாம். எண்ணங்கள் மாறுகின்றன. ஆனால் நீங்கள் மாறுவதில்லை. கடந்து செல்லும் எண்ணங்களைச் செல்ல விட்டு விட்டு மாறாத தன்னிலையைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
You are browsing archives for
Category: ரமணரின் மேற்கோள்கள்
ரமணர் மேற்கோள் 2
ரமணர் மேற்கோள் 2 பக்தர்: அறியாமை என்றால் என்ன? ரமணர்: யாருக்கு அறியாமை? விசாரித்துத் தெரிந்துக் கொண்டால் அறியாமை மறைந்து விடும். பொதுவாக மனிதர்கள் அறியாமையைப் பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புகிறார்களே தவிர, யாருக்கு அது உள்ளது என்று விசாரிப்பதில்லை. இது முட்டாள்தனம். அறியாமை யாருக்கும் தெரியாமல் வெளியில் உள்ளது. ஆனால் விசாரிப்பவர் யார் என்பதும் அவர் உள்ளே உறைபவர் என்பதும் தெரிந்த விஷயம். தூரத்தில், தெரியாமல் இருப்பதைப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்வதை விட்டு விட்டு, […]
ரமணர் மேற்கோள் 1
ரமணர் மேற்கோள் 1 ஆழ்ந்த தூக்கத்தில் மனிதருக்கு, தமது உடல் உள்பட, உடைமைகளே இருப்பதில்லை. துன்பப்படுவதற்கு பதிலாக அவர் மிகவும் இன்பமாகத் தான் இருக்கிறார். எல்லோரும் நன்றாக தூங்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். இதன் முடிவு என்னவென்றால், சந்தோஷம் மனிதரின் இயல்பான உள்ளார்ந்த தன்மை; அது வெளிப்புற காரணங்களால் ஏற்படுவதில்லை. தமது கலப்படமற்ற, மாசில்லாத இன்பத்தை உணர ஒருவர் தமது ஆழ்நிலையை, தந்நிலையை அறிய வேண்டும்.