ரமணர் மேற்கோள் 61
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 43
பக்தர்.: உலகத்தைச் சார்ந்த மனிதராகிய எங்களுக்கு, ஏதாவது ஒரு துயரம் இருந்து வருகிறது. எங்களுக்கு அதிலிருந்து மீளத் தெரிவதில்லை. கடவுளை வணங்குகிறோம். பின்பும் திருப்திபடுவதில்லை. நாங்கள் என்ன செய்வது?
மகரிஷி.: கடவுளை நம்புங்கள்.
பக்தர்.: நாங்கள் சரணடைகிறோம். ஆனாலும் உதவி கிடைப்பதில்லை.
மகரிஷி.: ஆமாம். நீங்கள் சரணடைந்திருந்தால், கடவுளின் விருப்பப்படி நடந்துக்கொள்ள உங்களால் முடிய வேண்டும். உங்களை மகிழ்விக்காதவற்றைப் பற்றி குறை சொல்லக்கூடாது. விஷயங்கள், தோன்றும் விதத்திலிருந்து வேறு விதமாக மாறக்கூடும். பல சமயங்களில், இன்னல்கள் மனிதருக்கு கடவுளின் மீது நம்பிக்கை ஏற்பட வழிகாட்டும்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 61