ரமணர் மேற்கோள் 12
பக்தர்: வெளியுலகில் கடவுளைப் பற்றி நினைப்பது எளிதாக இருக்கிறது. ஆனால் எண்ணங்கள் இல்லாமல் இருப்பது கடினமாக தோன்றுகிறது.
ரமணர்: அது அபத்தம்; மற்ற பொருள்களைப் பார்ப்பது எளிது, உள்ளே பார்ப்பது கடினம் !!
உண்மை இதற்கு எதிர்நிலையாக இருக்க வேண்டும்.
பக்தர்: எனக்குப் புரியவில்லை. அது கஷ்டம் தான்.
ரமணர்: ‘இது கஷ்டம்’ என்ற இந்த எண்ணம் தான் முதன்மையான தடங்கல். சிறிதளவு பயிற்சி உங்களை வேறு விதமாக நினைக்க வைக்கும்.
பக்தர்: அந்த பயிற்சி என்ன?
ரமணர்: ‘நான்’ என்பதன் மூலத்தை கண்டு பிடித்தல்.
ரமணர் மேற்கோள் 12